சந்திர கிரகணத்தை காண ஆர்வம்.. பிர்லா கோளரங்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
சந்திரகிரகணத்தை காண தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
சென்னை: சந்திரகிரகணத்தை காண தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அபூர்வ நிகழ்வான சந்திர கிரகணத்தை கண்டுகளித்து வருகின்றனர்.
152 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் மூன், ப்ளுமூன் என்ற அரிய நிகழ்வுகளுடன் இந்த சந்திர கிரகணம் தோன்றுகிறது. இதுபோன்றதொரு சந்திர கிரகணம் மீண்டும் 2028ஆம் ஆண்டுதான் நிகழும் என்பதால் இப்போதே இதனை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் பல இடங்களிலம் சமவெளிப் பகுதியில் மக்கள் சந்திர கிரகணத்தை காண குவிந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையிலும் சந்திர கிரகணத்தை காண மக்கள் திரண்டுள்ளனர்.
இதேபோல் சென்னை பிர்லா கோளரங்கத்திலும் சந்திர கிரகணத்தை காண மக்கள் குவிந்து வருகின்றனர். பிர்லா கோளரங்கத்தில் உள்ள தொலை நோக்கி மூலம் மக்கள் வரிசையில் சந்திர கிரகணத்தை கண்டுகளித்து வருகின்றனர்.