For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. பஸ்கள், ரயில்களில் அலைமோதும் கூட்டம்!

கோடை விடுமுறை முடிந்ததையொட்டி வெளியூர் சென்றிருந்த மக்கள் வீடு திரும்புவதால் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கோடை விடுமுறை முடிந்ததையொட்டி வெளியூர் சென்றிருந்த மக்கள் வீடு திரும்புவதால் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெருங்களத்தூரிலேயே இறக்கி விடப்படுவதால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கான முழு ஆண்டு தேர்வு முடிந்து ஒருமாதத்திற்கும் மேலாக கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிந்துள்ளதால் வெளியூர் சென்றிருந்த மக்கள் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

People are returning back to chennai after the summer holidays

இதனார் பஸ்கள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் பெருங்களத்தூரிலேயே இறக்கி விடப்படுவதால் அதிகாலை மற்றும் கொளுத்தும் வெயிலில் பெரும் தவிப்புக்கு ஆளாகின்றனர்.

அதிகாலை நேரத்தையும், கொளுத்தும் வெயிலையும் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்களும் நினைத்த கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பயணிகள் எப்படியாவது வீடு போய் சேர்ந்தால் சரி என கேட்கும் கட்டணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

மக்கள் படும் துயரத்தை உணர்ந்து புறநகர் பகுதிகளில் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
People are returning back to chennai after the summer holidays. People complaints that Autos are collecting much. they are urging to operate many buses in the outer area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X