கலைஞரின் புகழுக்கு வணக்கம்.. கருணாநிதியின் புகழை நினைவு கூற தமிழகம் முழுக்க விழா!
சென்னை: திமுகவின் தலைவர் கருணாநிதியின் புகழை நினைவு கூற தமிழகம் முழுக்க விழா நடத்தப்பட உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வயதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.
கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள், மக்கள் இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தினார்கள்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், கருத்துரிமை காத்த கலைஞர் என்ற தலைப்பில் ஊடக வல்லுநர்கள் 17ம் தேதி பேச உள்ளனர். 19ம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இலக்கியத்துறையினர் விழா நடத்துகிறார்கள்.
அதேபோல் 25ம் தேதி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் கலைத்துறையினர் விழா நடத்துகிறார்கள். 26ம் தேதி திருநெல்வேலியில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விழா நடத்துகிறார்கள்.
அதேபோல் இந்த மாதம் 30ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சி மைதானத்தில் அகில இந்திய தலைவர் இதேபோல் விழா நடத்துகிறார்கள்.