For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்தில் சிறுமி சாவு.. லாரிக்கு தீ வைத்த மக்கள்.. சென்னையில் பரபரப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: லாரி மோதியதில் 5 வயது சிறுமி இறந்ததையடுத்து லாரி தீ வைத்து கொளுத்தப்பட்டது.

சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி, 5 வயது மகள் பிரியதர்ஷினி ஆகியோருடன் நேற்றிரவு பைக்கில் வீடு திரும்பினார்.

People burn truck after it crash a bike in Chennai

மெகசின்புரம் பகுதியில் பின்னால் இருந்து வந்த லாரி மோதியதில் மூவரும் கீழே விழுந்தனர். விபத்து நடந்த இடத்திலேயே பிரியதர்ஷினி உயிரிழந்த நிலையில், பிரேம்குமார் அவரின் மனைவி ஆகிய இருவரும் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதை பார்த்து கோபமடைந்த அப்பகுதி மக்கள், லாரிக்கு தீ வைத்தனர். இதனால் லாரி முன்பகுதி கருகியது. விரைந்து வந்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்தனர். இதுகுறித்து எலிபண்ட் கேட் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அப்பகுதியிலுள்ள வேகத்தடையை நீக்கியதை எதிர்த்து பொதுமக்கள் கோஷமிட்டனர். இரவு 11 மணிக்கு முன்பாக கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

English summary
People burn truck after it crash a bike and killed a 5 year old girl in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X