For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்து மக்கள் கட்சிக்கு செம குஷி.. கும்பகோணம் மக்களும் ஹேப்பி.. எதுக்குன்னு பாருங்க!

பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Google Oneindia Tamil News

கும்பகோணம்: பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இன்று தமிழகத்தின் ஹாட் நியூஸ் பொன். மாணிக்கவேல்தான். இன்று அவர் ஓய்வு பெற போகிறார் என்பதால் நேற்றே இந்த இது சம்பந்தமாக சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரு பக்கம் அவருக்கு பிரவு உபச்சார விழா நடத்தினார்கள். இன்னொரு பக்கம் பதவி முடிகிறதே, இவரே தொடர்ந்து பதவியில் இருக்க கூடாது என்று ஏக்கமும் எழ ஆரம்பித்தது. கடைசியில் மீண்டும் அவரது பணியை நீட்டித்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு விட்டது.

ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்

ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்

இதை எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டாலும் 2 மாவட்டத்தில் மட்டும் பொன். மாணிக்கவேல் சம்பந்தமாக ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் எடுத்திருக்கிறார்கள். ஒன்று குமரி மாவட்டம், மற்றொன்று தஞ்சை மாவட்டம். பணி நீட்டிப்பு உத்தரவு வருவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது.

சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

இன்றோடு பணி ஓய்வு பெறப் போகிறார் என்பதால் அவர் ஆற்றிய பணியை பாராட்டும் விதமாக திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் பெருமாள் கோவிலில் பொன் மாணிக்கவேல் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதனை செய்தது அப்பகுதி மக்கள்தான். எல்லோருமே இந்த பூஜையில் கலந்து கொண்டு பொன்.மாணிக்கவேலுக்கு தங்களது வாழ்த்துகளை உரித்தாக்கினர்.

பட்டாசு வெடிப்பு

பட்டாசு வெடிப்பு

அதேபோல, பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை வரவேற்று கும்பகோணத்தில், மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ஏனெனில், 50 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன ராஜராஜ சோழன், உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகளை குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு தஞ்சாவூர் மக்களே விழாவாக அதை கொண்டாடினார்கள். தற்போதும் பணி நீட்டிப்பை வரவேற்று கும்பகோணம் மக்கள் ஆரவாரம் செய்தனர்.

முதல் டார்கட்

முதல் டார்கட்

குறிப்பாக இந்து மக்கள் கட்சியினர் தலைமை தபால் அலுவலகம் அருகே திரண்டு பட்டாசுகளை வெடித்தார்கள். வாகனங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உட்பட ரோட்டில் ஒரு கடை பாக்கி இல்லாமல் இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதுவும் இல்லாமல் முதல் டார்கட்டே கும்பகோணம் என்று பொன்.மாணிக்கவேல் சொல்லி இருக்கிறார். இதனால் கூடுதல் சந்தோஷத்தில் கும்பகோணம் மக்கள் இருக்கிறார்கள்.

English summary
People burst crackers and distribute sweets in Kumbakonam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X