பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நினைப்பது தவறு.. சத்யராஜ் பரபர!
பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பினால் அது தவறு என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திராவிட இயக்க தமிழர் பேரவை மாநாட்டில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வு கூடாது என கூறினார்.
புரிதலோடு கூடிய நாத்திகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று சத்யராஜ் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பெரியார் கருத்தை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பிடிக்கவில்லை என்றால் பெரியார் கருத்தை ஏற்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பக்கூடாது என்றும் அப்படி நம்பினால் அது தவறு என்றும் சத்யராஜ் தெரிவித்தார்.
நான் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல என்ற அவர், வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்ன என்பது பற்றி யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் நடிகர் சத்யராஜின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.