For Daily Alerts
Just In
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்... தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்துள்ளதை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர் ,காற்று மாசுபடுவதாக கூறி அப்பகுதி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த போராட்டத்தின்போது 144 தடையை மீறியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தூத்துக்குடி ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதை அறிந்த மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து உற்சாக மிகுதியில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
Comments
English summary
Tuticorin People burst crackers after the Sterlite industry gets sealed and closed.
Story first published: Monday, May 28, 2018, 20:21 [IST]