ஜெயலலிதா மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை - சோ
சென்னை: தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி அசாதாரணமானது. அரசுமீது மக்களுக்கு அதிருப்தி இல்லை, தமிழக முதல்வர் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இது காட்டுவதாக துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழில் 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் தலையங்கப் பகுதியில் அவர் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது...
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெற்றிருக்கின்ற வெற்றி அசாதாரணமானது, தன்னை மட்டுமே நம்பி, கூட்டணிக் கட்சிகள் என்று எதையும் சேர்க்காமல் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு அவற்றில் இரண்டைத் தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி என்பது முதல்வரின் மாபெரும் சாதனை.
அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதோடு தமிழக முதல்வர் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கருதும் வகையில் இந்த முடிவுகள் அமைந்துள்ளன.
திமுகவுக்கு அவர் அளித்துள்ள முழுத் தோல்வி தமிழக அரசியலுக்கு அவர் செய்துள்ள சேவை என்று அதில் கூறப்பட்டுள்ளது.