நபிகள் நாயகம் பற்றி தவறாக எழுதியவரை கைது செய்ய வேண்டும்.. பாம்பனில் மக்கள் சாலைமறியல்
ராமேஸ்வரத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டவரை கைது செய்ய கோரி பாம்பன் பாலத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டவரை கைது செய்ய கோரி பாம்பன் பாலத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பாம்பன் பகுதியை சேர்த்த சதிஷ் என்பவர் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டுள்ளளார். அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்பட்டார். இதனால் அவரை கைது செய்யக்கூறி பாம்பன் தரை பாலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டு உள்ளனர்.
நபிகள் நாயகம் பற்றி தவறாக எழுதியவரை கைது செய்ய வேண்டும்.. பாம்பனில் மக்கள் சாலைமறியல் https://t.co/esAqpJliR7 pic.twitter.com/wzLsP1K834
— Oneindia Tamil (@thatsTamil) March 8, 2018
பாம்பன் பாலத்தில் ஒரு மணிநேரமாக வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ராமேஸ்வரம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்