விடுமுறை தினமான இன்றும் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் திறப்பு.. அலை மோதிய மக்கள் கூட்டம்
சென்னை: வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஓட்டுநர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பதால், விடுமுறை நாளான இன்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆர்டிஓ அலுவலகங்களில், பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், விடுமுறை நாளான இன்று, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், சரக அலுவலங்கள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
ஒரிஜினல் லைசென்ஸ் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். விபத்துக்களை குறைக்கவே அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
எனவே லைசென்ஸ் தவறவிட்டவர்கள், கிழிந்து போன லைசென்ஸ் வைத்திருந்தவர்கள் என பல தரப்பட்டோரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்து வருகிறார்கள்.