வைகுண்ட ஏகாதசி... அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு... பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
திருச்சி/சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ திருத்தலங்களான பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சென்னை பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி முக்கிய கோவில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.