இனி ஒருபோதும் அதிமுக - பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் : தங்கத் தமிழ்ச்செல்வன்
இனி ஒருபோதும் அதிமுக - பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை : இனி வரும் தேர்தல்களில் ஒருபோதும் அதிமுக - பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் இன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு போராடி வருகிறது. இனி மேல் எந்தத் தேர்தலிலும் அதிமுக - பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தின் மூலம் தனி நபர்களுக்கு மட்டுமே ஆதாயம் உண்டு. மக்களின் எதிர்ப்பை மீறியும் அந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதற்கு பதில் சென்னை - கன்னியாகுமரி இடையே சாலையை அமைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.