For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டில் இருந்த பீரோவை அலேக்காகத் தூக்கிச் சென்ற 'பலே' கொள்ளையர்கள் - வீடியோ

வீட்டில் இருந்த பீரோவைத் தூக்கிச் சென்று, அதில் இருந்த 55 சவரன் நகையை கொள்ளையடித்த திருடர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

தேனி: வீட்டில் இருந்த பீரோவை தூக்கிச் சென்று, அதில் இருந்த நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியகுளம் பாரதி நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். அவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது திருடர்கள் வீட்டில் இருந்த பீரோவை தூக்கிச் சென்று, அருகில் இருந்த குளத்துக்கரையில் வைத்து உடைத்துள்ளனர்.

 Perikulam thieves looted in different way

மேலும், பீரோவில் இருந்த 55 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு, பீரோவை அங்கேயே விட்டுச் சென்றனர். அப்துல் ரஹீம் காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் பீரோ இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு புகார் கொடுத்தார்.

அதனையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் குளத்துக்கரையில் பீரோ இருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

English summary
In Periyakulam, thieves looted 55 sovereign jewels and police searching them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X