For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வந்த பெரியபாண்டியனின் உடலை டிவியில் பார்த்து கதறும் சொந்த ஊர் மக்கள்!

சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை உறவினர்கள் டிவியில் பார்த்து கதறி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை உறவினர்கள் டிவியில் பார்த்து கதறி வருகின்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டி நேற்று அதிகாலை ராஜஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் இன்று தமிழகம் வந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜலட்சுமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொலைக்காட்சிகள் நேரலை

தொலைக்காட்சிகள் நேரலை

இதைத்தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், காவலர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை சில தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிப்பரப்பின.

கார்கோ விமானம் மூலம்

கார்கோ விமானம் மூலம்

பெரியபாண்டியின் உடல் மாலை 6 மணி வரை விமான நிலையத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கார்கோ விமானம் மூலம் அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

டிவியை வைத்து பார்க்கின்றனர்

டிவியை வைத்து பார்க்கின்றனர்

அங்கிருந்து பெரியபாண்டியின் உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. உடல் இன்னும் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாத நிலையில் பெரியபாண்டி குறித்த தகவல்களை அவரது உறவினர்கள் வீட்டின் முன்பு டிவியை வைத்து பார்த்து வருகின்றனர்.

கதறும் உறவினர்கள்

கதறும் உறவினர்கள்

சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியபாண்டியின் உடலை தொலைக்காட்சிகளில் பார்த்து சொந்த ஊரில் உள்ள அவரது உறவினர்களும் கிராம மக்களும் கண்ணீர்விட்டு கதறி அழுகின்றனர்.

காத்துக்கிடக்கும் மக்கள்

காத்துக்கிடக்கும் மக்கள்

பெரியபாண்டியின் உடலுக்கு இன்று மாலையே இறுதிச்சடங்கு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியபாண்டியின் இறுதிச்சடங்கில் பங்பேற்பதற்காக மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் வந்து காத்துக்கிடக்கின்றனர்.

English summary
Inspector Periyapandi body arrived to Chennai. Periyapandi relatives cying by seeing his body on TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X