For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்ற 2 மாதத்தில் வீரமரணமடைந்த பெரியபாண்டி!

சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்ற 2 மாதத்தில் பெரியபாண்டி வீரமரணமடைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீஸ் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

    சென்னை: மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்ற 2 மாதத்தில் பெரியபாண்டி வீரமரணமடைந்துள்ளார்.

    கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில் மூன்றரை கிலோ தங்க நகைகள் கடந்த 16ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

    வெள்ளிக்கிழமை புறப்பட்டனர்

    வெள்ளிக்கிழமை புறப்பட்டனர்

    இதையடுத்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க கடந்த வெள்ளிக்கிழமை அவசரமாக ராஜஸ்தான் புறப்பட்டனர். இன்று அதிகாலை பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

    இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

    இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

    அப்போது கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சென்னை மதுராவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்
    பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

    சென்னை கொண்டுவர..

    சென்னை கொண்டுவர..

    காயமடைந்த போலீசாருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை சென்னை கொண்டுவரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    அக்டோபர் 10ல் பதவியேற்பு

    அக்டோபர் 10ல் பதவியேற்பு

    இந்நிலையில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரியபாண்டி கடந்த 2000ஆம் ஆண்டில் தான் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதிதான் பதவியேற்றுள்ளார்.

    2 மாதத்தில் வீரமரணம்

    2 மாதத்தில் வீரமரணம்

    சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்று 2 மாதத்தில் வீரமரணமடைந்துள்ளார். நெல்லையை சேர்ந்த பெரியபாண்டி ஆவடியில் வசித்து வருகிறார்.

    மனைவி மற்றும் மகன்கள்

    மனைவி மற்றும் மகன்கள்

    அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு மகன் லயோலா கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பும் மற்றொரு மகன் 9ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    வீரமரணமடைந்த வீரபாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் சென்னை கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சண்டை நடந்த பாலி மாவட்டம் ராம்வாஸ் கிராமத்தில் ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Chennai Maduravayal police inspector Periyapandi killed in Rajastan by thefts. Periyapandi taken charge as Maduravayal inspector last October 10th.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X