தந்தை பெரியார் குறித்து அவதூறு: ஜன.22, 23-ல் ரஜினிகாந்த் வீடு முற்றுகை- திவிக, தபெதிக
Recommended Video
சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து அவரது சென்னை போயஸ் கார்டன் வீட்டை வரும் 22--ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் விடுதலை கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியை பேசி, பெரியார் மீது அவதூரை பரப்பிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையரிடத்தில் 18.01.2020 அன்று காலை 11 மணியளவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
தனுசிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி.. தேதி அறிவித்தது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்
மனு அளித்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என்று உமாபதி அறிவித்தார்.
அதன்படி இதுவரை காவல்துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நடிகர் ரஜினிகாந்தும் இதுவரை தனது அவதூறு கருத்திற்கு வருத்தமும் தெரிவிக்காத காரணத்தினால், வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.23-ல் ரஜினி வீடு முற்றுகை- கோவை ராமகிருட்டிணன்
இதேபோல் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் ராமன் சீதை உருவங்களை நிர்வாணமாக கொண்டுவந்து செருப்பால் அடித்தார் என்று பொய்யான செய்தியை நடிகர் ரஜினிகாந்த் பரப்பி இருக்கின்றார். இது அப்பட்டமான பொய் செய்தி.
இதற்காக ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வருகின்ற 23-ந்தேதி காலை 10 மணிக்கு போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.