For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...சென்னையில் அதிர்ச்சி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

சென்னையின் மையப்பகுதியில் பிரதான சாலையில் உள்ளது தேனாம்பேட்டை காவல்நிலையம். இங்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.

Petrol bomb thrown at Teynampet Police Station

இந்த குண்டு வீச்சில் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த உடன் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இது தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

English summary
Mystery person has thrown Petrol bomb at Teynampet Police Station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X