சேலத்தில் மத்திய அரசு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. பதற்றம்
சேலத்தில் தபால் நிலையத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: தபால் நிலையத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலவலகங்கள் இழுத்து மூடப்படும் என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் சேலத்தில் தபால் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீசியதால் தபால் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.