For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை மறுநாள் அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் வாபஸ்... பெட்ரோல் பங்க் வழக்கம் போல் இயங்கும்

பெட்ரோலிய பொருள்களுக்கு தினமும் விலை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பங்க் உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நாளை மறுநாள் (அக்.13) பெட்ரோலிய பொருள்களுக்கு தினமும் விலை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பங்க் உரிமையாளர் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்துக் கொண்டு வந்தன. இந்நிலையில் புதுச்சேரி, விசாகப்பட்டினத்தில் மே 1 முதல் தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது.

Petrol Bunk strike withdraws

இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலிண்டர் எரிவாயு போல் பெட்ரோலிய பொருள்களுக்கு ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வரும் திட்டத்தை விரைவில் தொடக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தன. இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தனர்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் இன்று வாபஸ் பெறப்பட்டது.

English summary
Petrol bunk owners withdraw their strike announcement which opposing to fix the petrol, diesel prices on daily basis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X