சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை என்ன தெரியுமா மக்களே?
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனமே தினந்தோறும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அது முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாயாகவும் டீசலின் விலை 57 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்தன. நேற்று நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர். மேலும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிடுமோ என அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.