பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் உயர்வு.. புதிய உச்சத்தை எட்டியதால் வாகன ஓட்டிகள் கலக்கம்!
பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
சென்னை: பெட்ரோல் டீசல் விலை இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக நாள்தோறும் மாற்றி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப பெட்ரோல டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரிகத்த வண்ணம் உள்ளன. இதனால் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
[சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவார்களா? சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பு!]
இந்த நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 23 காசுகள் அதிகரித்து ரூ.86.51 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.78.69 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.