3-வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல் விலை : சென்னையில் ரூ.78.40-க்கு விற்பனை
மூன்றாவது நாளாக மாற்றம் இன்றி சென்னையில் ரூ.78.40க்கு விற்பனை பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, கடந்த மூன்று தினங்களாக பெட்ரோல் விலை மாற்றம் இல்லாமல், ரூ.78.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்துக்கொள்ள கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. சென்ற மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 80ஐ எட்டியது. இந்த கடுமையான விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.
நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை ரூபாய் 78.40க்கும், டீசல் விலை ரூபாய் 71.12க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2 தினங்களாக இந்த விலையில் எந்தவித மாற்றமும் செய்யபடாததை அடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் அதே விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.