குறைப்பதை போல குறைத்துவிட்டு ஏற்றம்.. மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை!
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து விலை குறைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
நேற்று 14 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தது. எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
[தீராத சாதி நோய்... மனசாட்சி இல்லாத மிருகங்கள் சாட்சாத் இவர்களேதான் ]
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 85.04-க்கு விற்கிறது
டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 77.73-க்கும் விற்கிறது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் விலையை குறைப்பது போல குறைத்துவிட்டு மீண்டும் ஏற்றி இருக்கிறார்கள்.