இதுதான் மிகவும் தவறான விஷயம்.. மீண்டும் லிட்டருக்கு 80 ரூபாயாக உயர்ந்தது பெட்ரோல் விலை
சென்னை: கடந்த 5 நாளில் பெட்ரோல் விலை படிப்படியாக லிட்டருக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. இதனால், தமிழத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80ஐ எட்டியுள்ளது.
கடந்த 6ம் தேதி வரை தொடர்ந்து, 8 நாட்களுக்கு பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால், 6ம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை கூடியபடி உள்ளது.
இன்றைய நிலவரப்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.53, சென்னையில் ரூ.79.43, கொல்கத்தாவில் ரூ.79.20, மும்பையில் ரூ.83.91 என்ற அளவுக்கு இருந்தது. சென்னையில் ரூ.80ஐ தொட உள்ள நிலையில், சேலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.14 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வேலூரில் ரூ.80.52, கோவையில் ரூ.79.82, மதுரையில் ரூ.80.04, திருச்சியில் ரூ.79.92, நெல்லையில் ரூ.79.78 என்ற அளவில் பெட்ரோல் விலை நிலவுகிறது.
இதனால் சாமானியர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். 'இதுதான் மிகவும் தவறான விஷயம்' என்று பிஜிலி ரமேஷாக புலம்பி திரிகிறார்கள்.