பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் உயர்வு.. வாகன ஓட்டிகள் பெரும் அவதி!
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை: பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள் தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
நேற்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று மீண்டும் அதிர்கரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலையில் 15 காசுகள் உயர்ந்துள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 86.28 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 13 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 78.49 காசுகளாக விற்பனையாகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வின் எதிரொலியாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.