வாசகர்களே.. ஆசிரியர் தினம்.. உங்கள் அனுபவங்களை எங்களுடன் ஷேர் பண்ணலாமே?
சென்னை: செப்டம்பர் 5. ஆசிரியர் தினம். மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்தினும் மேலானவர்கள்தான் நமது ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் - மாணவர் உறவு என்பது மிக மிக பெரியது. எல்லாவற்றையும் விட உயர்ந்தது. உயர்ந்த நிலையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது ஆசிரியர்களின் அன்பும், அரவணைப்பும், போதனைகளும் நிச்சயம் நீக்கமறக் கலந்திருக்கும். அப்படி ஒருவரின் வாழ்க்கையின் இன்றியமையாத அங்கம்தான் ஆசிரியர்கள்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
அதாவது, ஒருவனுக்கு கல்வியைத் தவிர சிறந்த செல்வம் வேறில்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை வழங்கும் ஆசிரியர்களுடனான உறவு குறித்து ஒவ்வொருவருக்கும் சிறந்த நினைவுகள் இருக்கும். வாசகர்களே, அத்தகைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.
உங்களது நினைவுகளை சுருக்கமாக (முடிந்தவரை தமிழில் எழுதவும்) எழுதி, புகைப்படம் அல்லது வீடியோ இருந்தால் எங்களுக்கு அனுப்பவும். உங்களது பெயர், ஊர் விவரம் முக்கியம். அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
வாருங்கள், ஆசிரியர் தினத்தை நன்றியுணர்வுடன் கொண்டாடுவோம்.