For Daily Alerts
Just In
பிளாஸ்டிக் அரிசி.. முட்டை.. எல்லாம் வதந்தி.. நம்பாதீங்க.. அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டவட்டம்
பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்பதெல்லாம் வெறும் வதந்தி. அதனை நம்ப வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். பாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: பேட்டரியால் இயங்கக்கூடிய பேருந்துகள் விரைவில் சென்னையில் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குளிர்சாதன வசதி உடன் பேட்டரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 4 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டை போன்றவை எல்லாம் வெறும் வதந்திகள் என்று அமைச்சர் கூறினார். மேலும், ஒரு பிளாஸ்டிக் முட்டை தயாரிக்க 4 ரூபாய் செலவாகும் என்பதால் ஏன் அதனை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிரிந்து போயுள்ள அதிமுக தொடர்கள் அனைவரும் சேர்ந்து விடுவார்கள். இது ஒரு குடும்பச் சண்டை. இது எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்..
Comments
English summary
Plastic rice and egg are rumour, do not believe, says transport minister M R Vijayabaskar.
Story first published: Monday, June 12, 2017, 14:00 [IST]