For Daily Alerts
Just In
குஷ்பு கழுத்தில் தொங்கிய பிளாஸ்டிக் ருத்ராட்ச தாலி வழக்கு.. ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கும்பகோணம்: ருத்ராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலி அணிந்த நடிகை குஷ்பு விவகாரம் நீதிமன்றபடியேறியுள்ளது. வழக்கு ஜனவரி 22ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகை குஷ்பு தனது பட ஆடியோ விளையாட்டு விழாவில் ருத்திராட்ச மாலையில் தாலி கோர்த்து கழுத்தில் அணிந்திருந்தார். இது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் வெளியானது.
குஷ்புவின் இத்தகைய செயல் இந்து மதத்தையும், ருத்ராட்சத்தையும் களங்கப்படுத்துவதாக உள்ளது என இந்து மக்கள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சண்முகபவன் வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Comments
English summary
A case was filed against actress Kushboo for wearing Plastic Thali with ruthracha malai defaming Hindu Makkal Katchi hearing is going on in Kumbakonam court on Tuesday . In the mean while, magistrate has postponed the hearing of this case to January 22.
Story first published: Wednesday, January 14, 2015, 11:45 [IST]