விபத்தில் காலை இழந்த தம்பி, தலையில் காயம்பட்ட அண்ணன்: உதவி கேட்டு மன்றாடும் தந்தை
Recommended Video
கோவை: கோவையில் நடந்த விபத்தில் காலை இழந்த சிறுவனுக்கு உதவி செய்யுமாறு அவரின் பெற்றோர் மன்றாடுகிறார்கள்.
கோவையில் உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்கிறார். அவரது மனைவி சவுந்தரவள்ளி. அவர்களின் மகன்கள் வசிராஜா (12) மற்றும் ஹரிஹரன் (6).
தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். வழக்கமாக பள்ளி வாகனத்தில் வீடு திரும்புவார்கள். இந்நிலையில் கடந்த 20ம் தேதி சிறுவர்கள் அவர்களாக நடந்து வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது மினிடோர் வாகனம் சிறுவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த சிறுவர்களை மேட்டுப்பாளையத்தில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வசிராஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது, சிறுவன் ஹரிஹரனின் வலது காலை எடுக்க வேண்டியதாகிவிட்டது. சிறுவர்கள் இருவரின் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் சங்கர் அல்லாடுகிறார்.
தயாள குணமுள்ள மக்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார். சிறுவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் கீழ்காணும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பலாம்.
S. Soundaravalli
வங்கியின் பெயர்: பேங்க் ஆப் இந்தியா
வங்கி கணக்கு எண்(Account Number): 820610110008039
ஐஎப்எஸ்சி கோடு(IFSC Code): BKID0008206
தொடர்புக்கு
81227-39212 / 98946-79212