பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு.. மே 16ல் வெளியாகிறது ரிசல்ட்!
பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் நிறைவுபெறுகின்றன.
Recommended Video
சென்னை: ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்த, பிளஸ் 2 தேர்வு, இன்றுடன் நிறைவு பெறுகின்றன.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதிவருகின்றனர்.
முதல் நாளில் நடைபெற்ற மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாட தேர்வு, குறிப்பிட்ட இடைவெளியில் நடந்து முடிந்தன. கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல் உட்பட, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும், பாட வாரியாக தேர்வுகள் நடந்தன. பெரும்பாலான பாடங்களின் வினாத்தாள் எளிதாக இருந்தன.
இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியில், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளன. ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.