For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனியில் 12-ஆம் வகுப்பு தனி தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டம்

தேனியில் 12-ஆம் வகுப்பு தனி தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தேனி: தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனியில் முத்துதேவன்பட்டியில் உள்ளது தனியார் பள்ளி. இங்கு 456 பிளஸ் 2 மாணவர்கள் இன்று இயற்பியல் தேர்வை எழுதினர்.

Plus 2 students protest against Squads in Theni

அப்போது பறக்கும் படையினர் முதலில் ஒரு வரி கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர தேர்வு எழுத முடியாத தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு முடிவடைந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பறக்கும் படையினர் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதே பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். ஆனால் அவர்கள் தேர்வு முடிந்ததும் வீடு திரும்பிவிட்டனர்.

இதுகுறித்து தேர்வு முறைகேட்டை தடுக்க வந்த பறக்கும் படையினர் கூறுகையில், தாங்கள் முதலில் தெரிந்த கேள்விகளை எழுதுங்கள் என்றுதான் அறிவுறுத்தினோம் என்றும் மாணவர்கள் கூறுவது போல் கெடுபிடி காட்டவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.

English summary
Plus 2 students in Theni private school protest against Chennai Exam Squads for imposing some restrictions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X