கருணாநிதி மறைவு.. அஞ்சலி செலுத்த நாளை மோடி, ராகுல், தலைவர்கள் வருகை
பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் நாளை சென்னை வரவுள்ளனர்.
சென்னை: மறைந்த கருணாநிதியின் உடலுக்கு, நேரில் அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை சென்னை வரவிருக்கிறார்.
கருணாநிதியின் மறைவினை அடுத்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் நாளை சென்னை வர உள்ளனர். பிரதமர் மோடி இன்றே மருத்துவமனை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கருணாநிதி மறைந்ததால், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த நாளை பிரதமர் மோடி வர உள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஏற்கனவே கருணாநிதியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். கருணாநிதியின் மேல் அதிக பிரியமும் மரியாதையும் வைத்திருப்பவர் ராகுல் காந்தி. எனவே நாளை ராகுல்காந்தி சென்னை வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வர உள்ளார். அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் நாளை சென்னை வர உள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்களும் நாளை கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் சென்னை வர உள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகினற்ன.