சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் பாமக வக்கீல் பாலு திடீர் சந்திப்பு
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை பாமகவின் வழக்கறிஞர் சென்னையில் திடீரென சந்தித்துள்ளார். கடுமையாக திமுக எதிர்ப்பு அரசியல் பேசி வந்த பாமகவின் பிரதிநிதி வழக்கறிஞர் ஸ்டாலினை சந்தித்துள்ளது அரசியலில் பரப
சென்னை: தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை , பா.ம.க வழக்கறிஞர் திடீரென கே.பாலு சந்தித்தார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு பாமக வழக்கறிஞர் பாலு இன்று நேரில் சென்றார். அங்கு அவரை வரவேற்ற ஸ்டாலின் அரசியல் தொடர்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முக்கியமாக, இந்த சந்திப்பின் போது மதுவிலக்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக மதுவிலக்கு தொடர்பாக தொடர்ந்து பேசிவருகிறது. அதே போன்று திமுகவும் முழு மதுவிலக்கு தொடர்பாக பேசி வருகிறது. இந்த நிலையில், அதுகுறித்த தீவிரமான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலினையும், திமுகவையும் பாமகவின் தலைவர்களான டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், பாமாகவின் பிரதிநிதி வழக்கறிஞர் பாலு ஸ்டாலினை சந்தித்திருப்பது திடீர் பரபரப்பை அரசியலில் உருவாகியுள்ளது.