தாத்தா ஆனார் அன்புமணி.. கொள்ளு தாத்தா ராமதாஸ்.. மகளுக்கு இரட்டை குழந்தை.. பூரிப்பில் தொண்டர்கள்
அன்புமணி மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
Recommended Video
சென்னை: மகளுக்கு குழந்தைகள் பிறந்ததையடுத்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தாத்தாவாகி விட்டார்!! பாமக நிறுவனர் ராமதாஸ் கொள்ளு தாத்தாவாகி விட்டார்!!
அன்புமணி சௌமியா தம்பக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இயல்பாகவே குடும்பத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் அதீத பாசம் வைத்துள்ளவர் அன்புமணி. இதில் மூத்த மகள் சம்யுக்தாவுக்கும், அன்புமணியின் சகோதரியின் மகன் ப்ரித்தீவனுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.
[ ஒரே இரவு மழை.. ஊட்டியாகிப்போன சென்னை.. ஏசி ஃபேன்களுக்கு லீவு.. ஜில் மோடில் மக்கள்!!! ]
அன்புமணியின் கருகரு தாடி
இந்நிலையில் எப்போதும் ஸ்மார்ட் லுக்குடனும் மழ மழ முகத்துடனும் ஜம்மென்று இருக்கும் அன்புமணி சில மாதங்களாக தாடி வைத்திருந்தார். கருகருவென வளர்ந்த தாடியின் ரகசியம் என்ன என்று செய்தியாளர்கள் நேரிடையாகவே கேட்டுவிட்டனர்.
மகளுக்காக தாடி
அதற்கு அன்புமணி, "மகள் சம்யுக்தா கர்ப்பமாக இருப்பதால், விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. நல்லபடியாக என் மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக குல தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு தாடி வளர்க்கிறேன்" என்று சொன்னதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவர் மட்டுமில்லை, இவரது மருமகன் ப்ரித்தீவனும் தாடியை வளர்த்தார்.
இரட்டை குழந்தைகள்
இந்நிலையில், நேற்று அன்புமணியின் மகளுக்கு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது. ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளு தாத்தா ராமதாஸ்
மருத்துவமனை முழுவதும் எல்லோருக்கும் ஸ்வீட் வழங்கப்பட்டு மகிழ்ந்தனர். இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவான அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். கொள்ளு தாத்தா ஆகிவிட்ட ராமதாஸ் மிக்க மகிழ்ச்சியுடனும் பூரிப்புடனும் உள்ளார்.