அரசாங்கமே பழுதாகி முடங்கிக் கிடக்கிறது.. இது நமது சாபக்கேடு: ட்விட்டரில் ராமதாஸ் வேதனை
தமிழக அரசாங்கமே பழுதாகிக் கிடப்பதாக ட்விட்டரில் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக அரசாங்கமே பழுதாகிக் கிடக்கிறது. இது நமது சாபக்கேடு என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்தூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 108 இலவச மருத்துவ சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தின் கீழ் மொத்தம் 846 ஆம்புலன்ஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் 250க்கும் மேற்பட்ட வாகனங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதாகி மாவட்ட தலைநகரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கு சரியான முறையில் சர்வீஸ் செய்யப்படுவதில்லை என்றும், ஏற்கனவே செய்த சர்வீஸ் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பணம் கொடுக்கப்படாததால் பராமரிப்பு நிறுவனங்கள் சர்வீஸ் செய்ய மறுப்பதாகவும் பல மாவட்டங்களில் புகார் எழுந்துள்ளதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் வேதனை தெரிவித்து உள்ளார்.
846 ஆம்புலன்ஸ் வண்டிகளில்250 பழுது. நோயாளிகள் பாதிப்பு: செய்தி - அரசாங்கமே பழுதாகி முடங்கி தான் கிடக்கிறது... என்ன செய்வது சாபக்கேடு!
— Dr S RAMADOSS (@drramadoss) November 26, 2017
அதில், ஆம்புலன்ஸ் பழுதாகி இருக்கும் செய்தியைக் குறிப்பிட்டு, தமிழக அரசாங்கமே பழுதாகி முடங்கிக் கிடக்கிறது... என்ன செய்வது எல்லாம் நமது சாபக்கேடு என்று தனது ட்விட்டரில் பதிவில் வேதனை தெரிவித்து உள்ளார்.