ஒரு மாம்பழம் கூட கிடைக்காமல் ஏமாந்து போன பாமக...!
சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாமக கடைசியில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் போய் விட்டது.
ஆரம்பத்தில் 5 தொகுதிகளில் பாமக முன்னிலை வகித்து வந்தது. இதனால் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் போகப் போக அப்படியே குறைந்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது.
முதலில் தனது பென்னாகரம் தொகுதியில் முன்னிலையில் இருந்த பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸுக்கு பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. கடைசியில் அவர் தோல்வியைச் சந்தித்தார். அதேபோல காடுவெட்டி குரு தோல்வியுற்றார். கடைசி வரை பாப்பிரெட்டி பாமக வேட்பாளர் நம்பிக்கை அளித்து வந்தார். ஆனால் அங்கு பின்னடைவைச் சந்தித்த அமைச்சர் பழனியப்பன் கடைசியில் வெற்றி பெற்று விட்டார். இதன் மூலம் பாமகவுக்கு நம்பிக்கை அளித்த கடைசி மாம்பழமும் அக்கட்சியிடமிருந்து பறி போனது.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 3,205 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. மொத்தத்தில் இந்தத் தேர்தலில் பாமக பெரும் நம்பிக்கையைக் கொடுதது கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது.