For Daily Alerts
Just In
அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் ரத்து தொடர்பான பாமக வழக்கு தள்ளுபடி
அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் ரத்தான நிலையில் வேட்பாளர்களிடம் செலவுத் தொகையை பெற்றுத் தர கோரி பாமக போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சை சட்டசபை தேர்தல்கள் ரத்தானதால் அதன் வேட்பாளர்களிடம் செலவுத் தொகையை பெற்றுத் தர கோரி பாமக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி நடத்த முடிவு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது ரத்தாக காரணமாக இருந்த அதிமுக, திமுக வேட்பாளர்களை குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் தேர்தல் செலவு தொகையை வசூல் செய்ய வேண்டி அரவக்குறிச்சி பாமக வேட்பாளர் பிஎம்கே பாஸ்கரன், தஞ்சை பாமக வேட்பாளர் குஞ்சிதபாதம் ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு 14 மாதங்களுக்கு பிறகு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
English summary
PMK's plea rejected by Chennai HC on Aravakkuruchi, Tanjore constitiuencies.