காடுவெட்டி குரு ஆதரவு பாமக இளைஞர்கள் துவக்கும் மே 25 இயக்கம்!
Recommended Video
சென்னை: பாமகவின் ஓர் அங்கமான வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு. உடல்நல குறைப்பாட்டால் கடந்த மே 25-ல் மறைந்தார். அவரது இழப்பு பாமகவுக்கு பேரிழப்பாகவே இருக்கிறது.
திருப்பூர், சேலம் மாவட்டம் துவங்கி வடதமிழகம் முழுவதும் குருவின் மறைவுக்கு வன்னியர் இளைஞர்கள் செய்த வீரவணக்க நிகழ்வுகளும், அஞ்சலிக் கூட்டங்களும் கண்டு அதிமுக மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்கட்சிகளுமே பிரமித்தன.
டாக்டர் ராமதாசுக்கு இணையான செல்வாக்கு குருவுக்கு இருந்திருப்பதை அப்போதுதான் பாமக தலைவர்களும் உணர்ந்தனர். குருவுக்கான வீர வணக்க நிகழ்ச்சியின் பல இடங்களில் , புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களும் இடம்பிடித்தன.
வன்னிய இளைஞர்கள், குருவின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டிருந்தனர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் துயரம் மே 17, 2009-ல் முடிவுற்றதை கொண்டு, தமிழகத்தில் மே17 என்கிற அமைப்பை இளைஞர்கள் உருவாக்கியது போல, குருவின் மறைவு தினமான மே 25-ஐ நினைவு கூர்ந்து அவர் விட்ட அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்காக மே 25 என் கிற அமைப்பை உருவாக்கும் இறங்கியுள்ளனர் பாமக வன்னியர் இளைஞர்கள். இந்த அமைப்பின் மூலம், மாற்று கட்சியில் இருக்கும் வன்னிய இளைஞர்களை தங்கள் பக்கம் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளனர்.