கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மாரடைப்பால் காலமானார்
கவிஞர் ரசூல் மாரடைப்பால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 60
சென்னை: கவிஞர் ரசூல் மாரடைப்பால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 60
தமிழின் மிக முக்கிமான கவிஞரும் இஸ்லாமிய நவீன விமர்சகருமான ஹெ.ஜி ரசூல் இன்று மாலை காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்மையில் வெளிவந்த அவரது ஒரு கட்டுரைக்காக ஜமாத்தினால் அவர் ஊர்விலக்கம் செய்யப்பட்டு தமிழ்நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்து வசித்தார்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர்களுள் ஒருவராகவும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் பதவி வகித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தவர் ரசூல்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தவர் ரசூல். அரசுப் பணியில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ரசூல் இன்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.