For Daily Alerts
Just In
தமிழக பாஜக தலைவர் யாராவது மோடியிடம் இதை இந்தியில் மொழி பெயர்த்துக் கூறட்டும்..!
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய முழு நிர்வாணப் போராட்டம் ஒட்டுமொத்த தமிழர்களையும் உலுக்கியுள்ளது.
பலரும் வேதனையுடன் இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு குமுறி வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் பழனிபாரதி தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:
இது எங்கள் நாடு
இவர்கள் எங்கள் விவசாயிகள்
இது இவர்களின் நிர்வாணமல்ல...
இந்த மண்ணின் நிர்வாணம்
மக்களின் நிர்வாணம்...
இங்குதான்
இந்த நாட்டின் தலைவர்
பத்து லட்ச ரூபாய் கோட்டு போட்டு
சுதந்திர தின உரை நிகழ்த்தினார்
கல்லாக சமைந்து போய் விட்ட மோடியிடம் யாராவது தமிழக பாஜக தலைவர் ஒருவர் இதை இந்தியில் மொழி பெயர்த்துக் கூறட்டும். உரைக்கிறதா என்று பார்ப்போம்.
Comments
English summary
Noted Poet Palani Bharathi has slammed PM Narendra Modi for his silence over the Tamil Nadu farmer issue.
Story first published: Monday, April 10, 2017, 14:42 [IST]