பாரதிதாசன் மகள் வசந்தா தண்டபாணி காலமானார்
புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் இளைய மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 84.
பாவேந்தர் பாரதிதாசனுக்கு சரஸ்வதி, ரமணி, வசந்தா ஆகிய மூன்று மகள்களும், மன்னர்மன்னன் என்ற ஒரு மகனும் இருந்தனர். இவர்களில் சரஸ்வதி, ரமணி ஆகியோர் ஏற்கெனவே காலமாகி விட்டனர்.
புதுச்சேரியில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த, இளையமகள் வசந்தா முத்தியால்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபகாலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார் வசந்தா.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் வசந்தாவின் உயிர் பிரிந்தது. அன்னாரது உடல் இன்று புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது
காலமான வசந்தாவுக்கு தமிழ்ச்செல்வம் என்ற மகளும், பாண்டியன், சேரன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.