For Quick Alerts
For Daily Alerts
Just In
கூவத்தூரில் 144 தடை உத்தரவு
பதட்டமாக உள்ள கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி.
சென்னை: பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ள கூவத்தூர் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சசிகலா சிறைக்குப் போகவுள்ளதால், அவர்களை மீட்க முதல்வர் ஓ.பி.எஸ் களம் குதித்துள்ளார். இதனால் கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அங்கு பெருமளவில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டையும் போலீஸார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இந்தநிலையில் தற்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி பிறப்பித்துள்ளார்.
அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.
Comments
English summary
Kanchipuram collector Gajalakshmi has slapped police 144 stay in Kuvathur.
Story first published: Tuesday, February 14, 2017, 15:26 [IST]