ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் எதிரொலி.. 199 பேர் மீது வழக்கு பதிவு
திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய 199 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video
திருவாரூர்: திருவாரூரில் கடம்பங்குடியில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய 199 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மாணவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாட்களுக்கு முன்னர் திருவாரூர் கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி பொருட்கள் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கடம்பங்குடி பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
இதையடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உட்பட கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு முற்றுகைப் போராட்டத்தால் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் திருவாரூர் கடம்பங்குடியில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய மாணவர்கள் உட்பட 199 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 199 பேரில் 7 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.