சென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆசிட் ஊற்றி தீ வைத்தவர் கைது
சென்னை மடிப்பாக்கத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் காயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராஜா என்பதாகும். இவர் மடிப்பாக்கத்தில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி செய்து வந்த ஊழியர் யமுனாவிற்கு பாலியல் தொல்லை கொடுப்பாராம்.
ராஜாவின் செயல்பாடுகளை யமுனா எதிர்த்துள்ளார். இந்தநிலையில் யமுனா மீது இன்று ஆசிட் ஊற்றி தீ வைத்த ராஜா, தப்பி ஓடினார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரத்த பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர். ஆசிட் வீச்சின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யமுனாவிற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் விநோதினி, சென்னை வித்யா என ஓரு தலைக்காதலால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த பின்னர் ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் பெண் ஒருவர் ஆசிட் வீசி எரிக்கப்பட்டுள்ளார்.