For Daily Alerts
Just In
ஓபிஎஸ் உறவினர் என்று நாடகம்... கிருஷ்ணகிரி ஆட்சியரின் உதவியாளரை மிரட்டியவர்கள் கைது
கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனை மிரட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனை மிரட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனிடம் நேற்று சிலர் சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக பேசி இருக்கிறார்கள். தமிழ்த்தென்றல், ஆறுமுகம் என்ற அந்த இருவரும் நியமனத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களை எடுக்க சொல்லி உள்ளனர்.
இதற்கு குமரேசன் மறுத்துள்ளார். இதனால் நாங்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர்கள் என்று கூறி மிரட்டி இருக்கின்றனர்.
இதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் பொய் சொல்லி ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆனது. இதையடுத்து இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Comments
English summary
Police arrest two people who scolded Krishnagiri collectors helper. They acted as the close releative to Dept. CM O. Panneerselvam.
Story first published: Friday, January 26, 2018, 19:51 [IST]