For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே வருடத்தில் 8 கொலை.. கடித்து உயிர் பறிக்கும் வேலூர் சைக்கோ.. ஆந்திராவில் அதிரடி கைது

மக்களை கடித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் முனுசாமி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே வருடத்தில் 8 கொலை.. கடித்து உயிர் பறிக்கும் வேலூர் சைக்கோ- வீடியோ

    வேலூர்: மக்களை கடித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் முனுசாமி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். வேலூரை சேர்ந்த இவன் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இப்படி கொலை செய்து வருகிறான்.

    கடந்த ஆந்திராவில் நடந்த தம்பதிகளின் கொலை ஒன்றில் கிடைத்த கை ரேகையை வைத்து இவனை பிடித்து இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இன்னொரு தம்பதிகளின் கொலையும் நடந்தது.

    இரண்டு கொலையையும் முனுசாமிதான் செய்து இருக்கிறான். இரண்டிலும் இவனது பல் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இவனை விசாரித்து வருகிறார்கள்.

    தொடக்கம்

    தொடக்கம்

    இவன் முதலில் திருடனாக வாழ்க்கையை தொடங்கியுள்ளான். 1992ல் இருந்து இருந்தே இவன் திருட்டு தொழிலில் இருக்கிறான். அடிக்கடி சிறைக்கு சென்று பெயிலில் திரும்ப வந்து பின் மீண்டும் திருடுவான். ஆந்திராவில்தான் அதிகமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கொலை செய்ய ஆரம்பித்தான்

    கொலை செய்ய ஆரம்பித்தான்

    ஆனால் சில நாட்களுக்கு பின் இவனுக்கு மனநலம் சரியில்லாமல் போன காரணத்தினால் கொலை செய்ய தொடங்கியுள்ளான். வீட்டில் தனியாக இருப்பவர்களை கடித்து கொலை செய்து, அந்த வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்வது இவனது வழக்கம். சாப்பாட்டிற்காக அடிக்கடி கொலை செய்வான் என்று கூறப்படுகிறது.

    எத்தனை

    எத்தனை

    இதுவரை 2017ல் மட்டும் 8 கொலைகள் செய்து இருக்கிறான். அதற்கு முன்பு எத்தனை கொலைகள் செய்தான் என்று கூறப்படவில்லை. மேலும் இதில் நிறைய குழந்தைகள், பெண்கள் அடக்கம். 200 ரூபாய் பணம் கொடுக்கவில்லை, பேசுவதற்கு செல்போன் கேட்டு கொடுக்கவில்லை என்று நிறைய கொலைகள் செய்து இருக்கிறான்.

    கொள்கை

    கொள்கை

    இவனுக்கு முக்கியமான கொள்கை ஒன்று இருக்கிறது. எங்கே திருடினாலும் பணத்தையும், உணவையும் மட்டுமே எடுப்பான். எந்த வீட்டிலும் இதுவரை நகையை திருடியது இல்லையாம். இவனுக்கு என்ன மாதிரியான மருத்துவம் கொடுக்கலாம் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Police arrested Vellore psycho killer Munusamy in Andhra Pradesh for series of murder. In 2017 he killed 8 people for not giving him food.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X