For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போயஸ் தோட்டத்தில் நள்ளிரவில் சசிகலா முன்பு சங்கு ஊதியவர்கள் கைது

சசிகலாவை வாழ்த்துவது போல சென்று நள்ளிரவில் சங்கு ஊதி எதிர்ப்பு தெரிவித்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மும்பையில் உள்ள ஆளுநர் சென்னை திரும்பிய உடன் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. சசிகலா முதல்வராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவிற்கு முன்பாக சங்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் 10 பேர், போயஸ் கார்டன் சென்றுள்ளனர். தடுப்பு அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நுழைந்தபோது, சசிகலா புகழைப்பாடி சென்றனர். சின்னம்மா வாழ்க என்று கோஷமிட்டு சென்றதால் காவலுக்கு இருந்த போலீசாரும் அனுமதித்துள்ளனர்.

Police arrests protesters near Poes Garden

போயஸ் தோட்டத்தின் அருகே சென்று, வேதா நிலையம் முன்பாக நின்ற அவர்கள் தங்களின் பையில் மறைத்துவைத்திருந்த சங்கை எடுத்து ஊத ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் பால்கனியில் நின்று இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சசிகலா அதிர்ச்சியடைந்தார்.

உடனே ஓடிவந்த காவலர்கள் சங்கு ஊதியவர்களைக் கைது செய்தனர். சசிகலா முன்பு சங்கு ஊதிய அனைவரும் தற்போது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
ADMK cadres openly opposing Sasikala, sound counch in Poesgarden before Sasiakal. Police have arrested protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X