எம்.ஏ.எம். ராமசாமியின் மாஜி வளர்ப்பு மகன் ஐயப்பன் மீது போலீஸ் திடீர் வழக்கு
சென்னை: பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் மாஜி வளர்ப்பு மகன் ஐயப்பன் மீது பட்டினப்பா்கம் போலீஸார் கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐயப்பனுக்கும், ராமசாமிக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. தனது சொத்துக்கள் மீதுதான் ஐயப்பன் குறியாக இருப்பதாக கூறி செய்தியாளர்களைக் கூட்டி சரமாரியான புகார்களை அவர் அடுக்கினார். மேலும் இனி தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது சகோதரர் ஏ.சி. முத்தையா பராமரிப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐயப்பன் மீது சென்னை பட்டினப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் ராமசாமி. அதன் பேரில் போலீஸார் தற்போது கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் ஐயப்பனைக் கைது செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராமசாமி - ஐயப்பன் இடையிலான மோதலால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.