For Daily Alerts
Just In
பிரபாகரன் படத்துடன் பேனர்.. பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் மீது வழக்கு
தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. கோர்ட் அனுமதியுடன் திறப்பு விழா நடத்தப்பட்டது.
இந்த விழா தொடர்பாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படங்களும் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து நெடுமாறன், காசி ஆனந்தன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் படத்தை போஸ்டரில் பிரசுரித்ததற்காக இந்த வழக்குப் பதிவாகியுள்ளதாம்.
Comments
English summary
Tanjore police have booked Pazha Nedumaran, Kasi Ananathan and 4 others for placing Prabhakaran's images in posters and banners.
Story first published: Sunday, November 10, 2013, 10:59 [IST]