'தங்க' மாரியப்பனே காரணம்.... மரணமடைந்த சதீஷ் குமார் உறவினர்கள் போராட்டம்: வீடியோ
மாரியப்பன் கார் மீது பைக்கை மோதிய சதீஷ் குமார் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். சதீஷ் குமார் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன
சேலம்: மாரியப்பனால் இறந்த சதீஷுக்கு நீதி கிடைக்கும்வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் புதிதாக கார் வாங்கியுள்ளார். அந்த காரின் மீது சதீஷ்குமார் என்பவர் தெரியாமல் தனது இருசக்கர வாகனத்தை மோதிவிட்டார். அதனால் கார் சேதம் அடைந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பனும் அவரது நண்பர்கள் யுவராஜ், சபரி ஆகிய மூவரும் சென்று சதீஷ் குமாரை மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் பிடுங்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின், மாரியப்பன் வீட்டுக்கு சமாதானம் பேசச் சென்ற சதீஷ்குமார், ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரியப்பன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது, சதீஷ் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மாரியப்பன், இந்த மரணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என மறுத்துள்ளார்.